search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர் தேக்கம்"

    கூடலூரில் சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கக்கோரி வாழையை நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    கூடலூர்:

    கூடலூர் அதிகாரிவயல் பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. மேலும் குடிநீருடன், கழிவு நீரும் கலந்து பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. எனவே பழுதடைந்த குழாய்களை சீரமைக்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காளம்புழா பாலத்தின் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கொசு தொல்லைகளும் அதிகரித்து வருகிறது. கழிவுநீர் தேங்குவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் வாழையை நட்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாருவது இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. மேலும் பழுதடைந்த குழாய்களில் இருந்து குடிநீர் தினமும் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கக்கோரி வாழையை நட்டு போராட்டம் நடத்தினோம். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டைபோல் தேங்கி உள்ளதால் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 12-வது வார்டுக்குட்பட்ட பாப்பாடி தர்கா, கோரிமேடு 6-வது தெரு, 7-வது தெரு பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்து நகராட்சி கமி‌ஷனரிடம் மனு அளித்தனர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “கழிவுநீரை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

    ×